ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக
சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றைப்
பண்டிகைகளாகக் கொண்டாடி வருகின்றனர்.

பொதுவாக பண்டிகை என்றால் அதில்
கேüக்கைகளும் இடம் பெற்றிருக்கும்.
தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக்
கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது ஒரு வணக்கமாகவே கருதி செய்யப்படுகிறது.

இது போன்ற பண்டிகைகüல் வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை எரிய
விட்டுக் கொண்டாடும் அதே வேளையில் ஏழைகள் அடுப்பெரிக்கக் கூட வழியில்லாமல்
திண்டாடுவதைப் பார்க்கிறோம். ஆனால் மனித குலத்தின் வாழ்க்கை நெறியான
இஸ்லாமில் வசதி படைத்தவர்களுடன் சேர்ந்து ஏழைகளும், பெருநாட்களைக் கொண்டாட
வேண்டும் என்பதற்காக இரு பெருநாட்கüலும் இரு வேறு விதமான தர்மங்களை
மார்க்கம் வலியுறுத்துகின்றது. நோன்புப் பெருநாளின் போது ஸதகத்துல் ஃபித்ர்
எனும் தர்மம் வழங்குவதையும், ஹஜ் பெருநாளின் போது ஆடு, மாடுகளைக் குர்பானி
கொடுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதையும் இஸ்லாம்
வணக்கமாக ஆக்கியிருக்கின்றது. இப்படிப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும்
முஸ்லிம்களில் சிலரிடமும் பட்டாசுக் கலாச்சாரம் தொற்றிக் கொண்டு விட்டது.
மாற்று மதத்தவர்களைப் பின்பற்றி, இவர்களும் பெருநாள் கொண்டாடும் போது
பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர். இந்தப் பட்டாசினால் மனித குலத்திற்கு
ஏற்படும் தீமைகளை
எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும். பட்டாசு
வெடிக்கும் போது நான்கு மீட்டர் தொலைவில் 125 டெசிபல் சப்தத்திற்கு மேல்
வெடிக்கும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகள்
தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை
வெடிக்கச் செய்தால் அவர் 1986ஆம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச்
சட்டத்தின் படி தண்டனைக்குரியவர் ஆவார். (தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள
சப்தங்களையே நாம் செவியுறுகிறோம்.) பேரியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர்,
சோடியம் நைட்ரேட் அயர்ன் பவுடர், மேக்னீசியம் பவுடர், ஸ்ட்ரோனடியம்
நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட் ஆகிய கலவைககள் அதிக அளவில் கலந்து
தயாரிக்கப்படும் பட்டாசுகள் மிக அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை
ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. இவை சுற்றுப்புறச்
சூழலை மாசுபடுத்துகின்றன. இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும்
உடல் நலக் கேட்டை ஏற்படுத்துகிறது.

ஹிந்து நாளேட்டின் மதுரை பதிப்பில்,
"ஆஸ்துமாக்காரர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சிக்குரிய நாளல்ல'' என்ற தலைப்பில்
21.10.2006 அன்று வெளியான செய்தி இதோ: யானை வரும் பின்னே! மணி ஓசை வரும்
முன்னே! என்பது போல் எட்டு வயது பவித்ராவுக்கு வண்ண வண்ண மத்தாப்புக்கள்,
வாய் சிந்தும் புன்னகைப் பூக்கள், வகை வகையான இனிப்புக்கள் என தீபாவளி
வருகையை அட்டகாசமாகப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. அவள் பட்டாசு கொளுத்தி
பண்டிகையைத் துவக்கியதும் இரண்டு நாட்களாகத் தொடர் இருமலும், இளைப்பும்
அவளது பண்டிகை மகிழ்ச்சியைப் பறித்துக் கொண்டது. கடைசியில் அவள் கடுமையான
ஆஸ்துமாவின் பிடியில் சிக்கி, தீபாளிக்கு முன்னால் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டாள். "கடந்த எட்டு மாதமாக அவள் சுகமாகத் தான் இருந்தாள். இந்த
சீசன் தான் அவளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. பட்டாசுப் புகை அவளது இளைப்பை
அதிகரித்து, ஆட்டி அலைக்கழிக்கின்றது'' என்று அவளது தாயார் லெட்சுமி
கூறுகிறார். பண்டிகை கொண்டாட்டம் தொடரத் தொடர, காற்று மேலும் மேலும்
மாசுபட்டுக் கொண்டே இருக்கின்றது. அதிலும் ஈரப்பதமான குளிர் காற்றில் இந்த
வெடி மருந்துப் புகை மண்டலம் ஒன்றாகக் கலக்கையில் அது மாசு படுவதன் அளவு
அதிகரிப்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. எனவே இந்த சீசனில் நாம் சுத்தமான
காற்றை சுவாசிக்க முடியாமல் ஆகி விடுகின்றது. "ஒவ்வொரு தீபாவளியின் போதும்
இளைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக
வருகின்றன. ஏற்கனவே வயது வந்த, நிரந்தர ஆஸ்துமாக்காரர்களுக்கு இந்தக் கால
கட்டத்தில் ஆஸ்துமா அதிகமாகி விடுகின்றது. அவர்கள் பெரும்
அவதிக்குள்ளாகிறார்கள்'' என்று ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஆய்வு மையத்தின்
மருத்துவர் ஆர். ஸ்ரீதரன் கூறுகின்றார். இந்தக் கால கட்டத்தில் இத்தகைய
நோயாளிகள் 50 சதவிகிதம் அதிகரித்து விடுகின்றனர் என்று அவர்
குறிப்பிடுகிறார். "ஆஸ்துமா நோயுள்ளவர்கள் மட்டும் ஆபத்தில் மாட்டிக்
கொள்வதில்லை! புள்ளி விபரப்படி, ஆஸ்துமா இல்லாத பல பேருக்குப் புதிதாக
ஆஸ்துமா ஏற்பட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். இதனால் புதிய ஆஸ்துமாக்
காரர்களின் எண்ணிக்கை இந்தப் பருவத்தில் கூடி விடுகின்றது'' என்று மூச்சு
ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர். நரசிம்மன் கூறுகின்றார். இதற்குக்
காரணம் இந்தப் பட்டாசுப் புகை மூச்சுக் குழாயின் மேல் சவ்வை சிதைத்து
விடுகிறது. இதனால் மனித உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி அழிந்து
போய், அவர் மூச்சு சம்பந்தமான வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி விடுகிறார்.
இந்த வைரஸ்களில் ஒன்று பெரிய, சிறிய மூச்சுத் துவாரங்களை பாதிப்படையச்
செய்கிறது. அதனால் அவர் மூச்சுத் திணறல் மற்றும் இளைப்பு நோய்க்கு
உள்ளாகிறார். இவருக்கு ஏற்படும் இந்த நோயின் அறிகுறிகள் ஆஸ்துமா, இளைப்பின்
அறிகுறிகளைப் போன்றவை தான். இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மூன்றில்
ஒரு பகுதியினர் ஆஸ்துமாவுக்குப் பலியாகி விடுகின்றனர் என்று டாக்டர்
ஸ்ரீதரன் தெரிவிக்கிறார். மாசுபட்ட இந்தக் காற்று மூச்சுத் துவாரங்களில்
வீக்கத்துடன் கூடிய அலர்ஜியை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பட்டாசுப்
புகையைச் சுவாசிப்பவர் இந்த நோயினால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டு
விடுவார். அதிலிருந்து அவர் தப்ப முடியாது. பட்டாசில் சல்பர் டை ஆக்ஸைடு
சேர்மானங்கள் கலந்திருக்கின்றன. எனவே அது வெடிக்கும் போது அவற்றின் புகை
மூக்கின் வழவழப்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கின்
அருகிலுள்ள குழிகளில் நீர் கோர்த்து, சளி பிடித்தல், மூக்கடைப்பு போன்ற
நோய்கள் ஏற்படுகின்றன. சளி அடைப்பு நோய் உள்ளவர்களது நுரையீரலின் கதையை
முடிக்கும் அளவுக்கு இதன் வீரியம் அமைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் கூட,
சாதாரண மூச்சுத் திணறல் முதல் நிமோனியா வரையிலான நோய்களால் மிகப் பெரும்
அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மருத்துவர்களின் வெறும் ஆய்வு
அடிப்படையில் அல்ல! அனுபவ அடிப்படையில் தெரிவிக்கின்ற
இந்தச் செய்தியை
மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
இந்தப் பட்டாசுப் புகை
சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்லாது நம்முடைய சுவாசப் பையையும் மாசுபடுத்தி,
சேதப்படுத்தி விடுகின்றது என்பதை நாம் நன்கு விளங்கிக் கொள்கிறோம். பட்டாசு
வெடிப்பதால் நாம் இரண்டு பாவங்களைச் செய்கிறோம். ஒன்று நம்மை நாமே
அழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது. இந்த இரண்டு
பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன.
உங்களையே கொன்று
விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:29
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை
செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 2:195
நம்மை நாமே அழித்து, மற்றவர்களையும் அழிக்கும் இந்தப் பாவங்களை நாம் ஒரு
போதும் செய்யக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது. இன்று
பட்டாசினால் கை, கால், கண்கள் பறி போகின்றன. எத்தனையோ பேருக்குக் கண்
பாதிக்கப்பட்டுள்ளது. கை, கால் முடமாகியிருக்கின்றது. பறி போன கண்ணை, கை,
கால்களை யாராவது திருப்பித் தர முடியுமா? பட்டாசில் உருவாகும்
நெருப்புக்கு, இது உயிருள்ளது, உயிரில்லாதது என்று பிரித்துப் பார்க்கும்
ஆற்றல் உள்ளதா? ஏன் நெருப்புடன் இப்படி ஒரு விளையாட்டு? மனித உயிருக்கும்
உடைமைக்கும் இன்ன பிற உயிரினத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஊறு
விளைவிக்கும் இந்தத் தீயுடன் இப்படி ஒரு விபரீத விளையாட்டை நம்முடைய
குழந்தைகள் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் மிகப்
பெரும் பொறுப்பும் கடமையுமாகும். திடுக்கிடும் தொட்டில் குழந்தைகள்
பட்டாசுகள் வெடிப்பதால் இது வரை கண்ட இடையூறுகள் மட்டுமின்றி இன்னும்
பல்வேறு இடையூறுகளும் உள்ளன. வெடிச் சத்தம் கேட்டவுடன் நாம் வளர்க்கும்
கோழி போன்ற பறவையினங்களும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் அஞ்சி
நடுங்குகின்றன; அலறித் துடிக்கின்றன. தொட்டிலில் தூங்கும் குழந்தைகள்
வெடிச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்து அழுகின்றன; அதிர்ச்சியடைகின்றன.
இப்படி எல்லா இனத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் இந்தக் காரியத்தை ஒரு
போதும் முஸ்லிம் சமுதாயம் செய்யக் கூடாது.
"பிற முஸ்லிம்கள் எவரது நாவு,
கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார்.
மேலும் எவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதை விட்டும் ஒதுங்கிக் கொள்கிறாரோ
அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 10
வெடியின் விளைவுகளையும் விபரீதங்களையும் மாற்று மத நண்பர்களுக்கும்
விளக்கி, அவர்களையும் இந்தத் தீமையை விட்டுத் தடுத்து நிறுத்த வேண்டிய
பொறுப்பு நமக்கு உள்ளது. இந்தப் பொறுப்பையுடைய நாமே இந்தக் காரியத்தைச்
செய்யலாமா? வீணாகச் செலவழிக்கும் போது, "காசைக் கரியாக்காதே!'' என்று
வழக்கத்தில் சொல்வதுண்டு! ஆனால் இன்று நம்முடைய குழந்தைகளுக்கு வெடியை
வாங்கிக் கொடுத்து விபத்தைத் தேடிக் கொடுக்கிறோம் என்பது ஒரு புறமிருக்க,
காசை எப்படிக் கரியாக்க வேண்டும் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறோம்.
அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 102:8
பொருளாதாரம் என்பது ஓர் அருட்கொடை! அந்த அருட்கொடையை எப்படிச் செலவழித்தோம்
என்பது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற பயம் நமக்கு வர வேண்டும். "ஓர்
அடியான் தனது வாழ்நாளை எப்படிக் கழித்தான்? கல்வியை எப்படிச்
செயல்படுத்தினான்? அவனுடைய பொருளை எங்கிருந்து சம்பாதித்தான்? அதனை
எப்படிச் செலவழித்தான்? தன்னுடைய இளமையை எப்படிக் கழித்தான்? என்று
விசாரிக்கப் படாமல் மறுமை நாளில் அவனது பாதம் நகராது'' என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ பர்ஜா (ரலி) நூல்:
திர்மிதீ 2341
இந்த ஹதீஸின் படி பட்டாசு வகைக்காக செலவழித்த பணங்காசுக்கு
நாம் பதில் சொல்லாமல் மறுமையில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எம்.
ஷம்சுல்லுஹா
No comments:
Post a Comment