Monday, May 26, 2014

யூனுஸ் தூதர்களில் ஒருவர் _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 25.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "யூனுஸ் தூதர்களில் ஒருவர் " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

திருக்குர்ஆன் அத்தியாயம் : 37

அஸ் ஸாஃப்பாத் - அணி வகுப்போர்

139. யூனுஸ் தூதர்களில் ஒருவர்.
140, 141. நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது, அவர்கள் (கப்பலில் இருந்து யாரை வெளியேற்றுவது என்று) சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார்.26
142. இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.
143, 144. அவர் (நம்மை) துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.26
145. அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்.
146. அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம்.
147. அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக452 அனுப்பினோம்.

No comments: