Tuesday, June 10, 2014

"மனிதன் வளர்வதும் தேய்வதும் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 09.06.2014 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள்   "மனிதன் வளர்வதும் தேய்வதும் " -333 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

 333. மனிதன் வளர்வதும் தேய்வதும்
அதிக காலம் மனிதன் வாழும் போது இறங்குமுகத்தை நோக்கிப் பயணிக்கிறான் என்று இவ்வசனத்தில் (36:68) கூறப்படுகிறது.
16:70, 22:5 வசனங்களிலும் அல்லாஹ் இது பற்றி கூறுகிறான்.
மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து, நடையை இழந்து படுக்கையில் விழுகிறான். நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தை போன்று ஆகி விடுகிறான்.
மனிதன் நடுத்தர வயது வரை ஏறுமுகமாக சிறிது சிறிதாக வளர்ந்து வருகிறான். நடுத்தர வயதை அடைந்த உடன் இறங்குமுகமாகத் தேய்ந்து இறுதியில் பச்சிளம் குழந்தை படுக்கையில் மலஜம் கழித்தது போன்ற நிலையை அடைகிறான். இதைத்தான் இவ்வசனம் படைப்பில் இறங்குமுகம் என்று கூறுகிறது.

No comments: